மாலை 3.20 மணி முதல் மாலை 4.45 மணி வரை, எந்நேரமும் 100 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
அபிஷேக பொருட்களுக்கும் வில்வ அர்ச்சனைக்கும் பக்தர்கள் http://sst.org.sg/ எனும் இணையப் பக்கத்தில்பதிவு செய்யலாம்.
உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் அபிஷேக பொருட்களும் மற்றும் வில்வ அர்ச்சனையை செலுத்திவிடுவார்கள்.
பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பிரதோஷ பூஜையை பார்க்க இயலாது.
மற்றவர்களும் கோயிலுக்குள் நுழைந்திட வாய்ப்பு தர, பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்ட பாதையில் நிற்காமல், தொடர்ந்து நடந்தவாறு வழிபாட்டில் ஈடுபடுமாறு கோயில் நிர்வாகம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறது.
மாலை 3:30 மணி முதல், பிரதோஷ பூஜையின் நேரலையை https://youtu.be/i5vNbn7m-iM எனும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் இணையத் தளத்தில் பார்வையிடலாம்.
இந்த மாற்றங்களின் தொடர்பில் உங்களது ஒத்துழைப்பையும் புரிந்துணர்வையும் நாடுகிறோம். மேல் விவரங்களுக்கு, 67434566 எனும் கோயிலின் அலுவலக எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.